எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டாரா பேட்டன்கட்டுரைகள்

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார். 

கண்ணாடி சோதனை

கண்ணாடியில் தெரிவது யார்? என்னும் கேள்வியை சுய அங்கீகாரத்தைப் பரிசோதிக்கும் உளவியலாளர்கள் சிறுபிள்ளைகளிடம் கேட்கின்றனர். பதினெட்டு மாதங்களும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுபிள்ளைகளால் கண்ணாடியில் தெரியும் உருவம் தங்களுடையதுதான் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் பிள்ளைகள் வளரும்போது அது தங்களுடைய உருவம்தான் என்பதை அறிந்துகொள்கின்றனர். சுய அடையாளம் காண்பது என்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்குமான முக்கிய அறிகுறி.
விசுவாசிகள் இயேசுவில் வளருவதும் முக்கியமானது. கண்ணாடியில் தங்களை அடையாளம் காணும் சோதனையை யாக்கோபும் பயன்படுத்துகிறார். “சத்திய வசனமே” யாக்கோபின் கண்ணாடி (யாக். 1:18). நாம் வேதத்தை வாசிக்கும்போது என்ன பார்க்கிறோம்? வேதம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும்போது, அதில் நாம் நம்மைப் பார்க்கமுடிகிறதா? தேவன் கொடுத்த கட்டளையின் பிரகாரம் நம்முடைய செய்கைகள் இருக்கிறதா? நம்முடைய இருதயத்தையும் செய்கைகளையும் நிதானிக்கும்போது, அது தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா அல்லது நாம் மனந்திரும்பி, மாற்றத்திற்கேதுவான வாழ்க்கை வாழ வேண்டுமா என்பதை அடையாளம் காண்பதற்கு வேதம் நமக்கு உதவுகிறது.
வேதத்தை நிர்விசாரமாய் வாசித்து, அதன்படி செய்யாமல் இருப்போமாகில், நம்மை நாமே வஞ்சிக்கிறோம் என்று யாக்கோபு சொல்லுகிறார் (வச.22). வேதாகமம் தேவனுடைய சித்தத்தின்படி ஞானமாய் வாழுவதற்கான திட்டத்தை நமக்குக் கொடுக்கிறது. அதை நாம் வாசிக்கும்போதும், தியானிக்கும்போதும், அதை உட்கொள்ளும்போதும், நம்முடைய இருதயத்தைப் பார்க்கும் சிலாக்கியத்தை அருளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்து, தேவையான மாற்றங்களை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்த முடியும்.

விளக்கை எரியவிடுங்கள்

ஓட்டல் வணிகத்தின் ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது ஒரு இரவு நேரம். அந்தக் கட்டிடத்தை சுற்றி எதுவும் இல்லை. அந்தக் கட்டிடத்தின் வராந்தா கதவின் அருகில் இருந்த விளக்கிலிருந்து மட்டும் சிறிய வெளிச்சம் வந்தது. பயணிகள் படிகளில் ஏறிச்சென்று கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அந்த ஒளி போதுமானதாயிருந்தது. அங்கே “உங்களுக்காக நாங்கள் விளக்கை எரிய விடுகிறோம் & quot; என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. சோர்வோடு வரும் பயணிகள் தங்கி இளைப்பாறுவதற்கு அந்த விளக்கு வரவேற்படையாளமாய் அமைந்தது.

இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அந்த வரவேற்பு விளக்கைப் போன்றவர்கள் என்று இயேசு சொல்லுகிறார். அவர் தன்னை பின்பற்றுபவர்களைப் பார்த்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14) என்றார். விசுவாசிகளாகிய நாமும் இருள் சூழ்ந்த உலகத்திற்கு ஒளியாக திகழ்கிறோம்.

மேலும் அவர் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (வச. 16) நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கும்படிக்கு கூறுகிறார். நம்முடைய விளக்கை அணையாமல் எரியச் செய்தால், நாம் பலரை நம்மிடமாய் வரவேற்று, மெய்யான ஜீவ ஒளியான கிறிஸ்துவை (யோவான் 8:12) அறிந்துகொள்ளும்படி செய்யலாம். சோர்ந்துபோன, இருள் சூழ்ந்த உலகத்தில் அவருடைய விளக்கு அணையாமல் எரிகிறது.

உங்கள் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? இயேசு உங்கள் மூலமாய் விளக்கை பிரகாசிக்கச்செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பார்த்து அவ்வெளிச்சத்தைத் தங்களிலும் பிரகாசிக்கச்செய்வார்கள்.

பயண ஒளி

ஜேம்ஸ், இருசக்கர வாகனத்தில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் 2011-கிமீ சாகச பயணம் மேற்கொண்டார். அவருடைய 1496வது கி.மீட்டரில், எனது நண்பர் அவரை சந்தித்தார். அப்போது ஜேம்ஸின் முகாமிடும் பொருட்களை யாரோ திருடிச் சென்றதை அறிந்ததும், எனது நண்பர் தன்னுடைய போர்வையையும் ஸ்வெட்டரையும் கொடுக்க முன்வந்தார். ஆனால் ஜேம்ஸ் அதை மறுத்துவிட்டார். ஏனென்றால், அவர் தெற்கு நோக்கி பயணிக்கும்போது, தட்பவெப்பநிலையின் காரணமாக, அவர் தன்னுடைய பொருட்களை குறைக்கவேண்டியிருக்கும் என்று அவர் கூறினாராம். மேலும் அவர் தனது இலக்கின் முடிவை நெருங்க நெருங்க, அவர் மிகவும் சோர்வடைந்தவராய் இருப்பதினால், அவர் சுமந்து செல்லும் எடையை குறைத்தே ஆகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். 

ஜேம்ஸின் உணர்தல் புத்திசாலித்தனமாக இருந்தது. எபிரெயர் நிருப ஆசிரியரின் கூற்றை இது பிரதிபலிக்கிறது. வாழ்க்கையில் நமது பயணத்தைத் தொடரும்போது, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு" (12:1), தொடர்ந்து முன்னேற, நாம் குறைவான பொருட்களை கொண்டுசெல்ல வேண்டியது அவசியமாயிருக்கிறது. 

கிறிஸ்தவர்களாக, இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு விடாமுயற்சி தேவை (வச. 1). நம்முடைய ஓட்டத்தை தடைசெய்யும் மன்னிக்க முடியாத சுபாவம், அற்பத்தனம், மற்ற பல பாவங்களிலிருந்து விடுபடுவதே, நம்முடைய சமூகமான பயணத்தை உறுதிசெய்யும் காரியங்கள். 

இயேசுவின் உதவியின்றி, நாம் இலகுவாகப் பயணித்து, இந்தப் பந்தயத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியாது. நாம் “இளைப்புள்ளவர்களாய்... ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” (வச. 2-3) “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” ஓடக்கடவோம். 

 

தேவனின் நகர்வுகள்

நான் வார்த்தை புதிர் விளையாட்டை அதிகம் விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்கு பிறகு என்னுடைய அந்த திரும்புமுனையான நகர்வுக்கு என்னுடைய நண்பர்கள் “கடாரா” என்ற என்னுடைய பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். அந்த விளையாட்டில் அனைவரும் விளையாடி முடித்தவுடன், மீதமிருந்த எழுத்துக்களை நான் ஒன்று சேர்த்து, ஆட்டம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளும் ஏழு எழுத்து வார்த்தையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினேன். அதினிமித்தம் நான் ஐம்பது போனஸ் புள்ளிகளைப் பெற்றேன். மற்ற போட்டியாளர்களிடம் மீதமிருந்த அனைத்துப் புள்ளிகளையும் பெற்றேன். ஆட்டத்தின் கடைசி இடத்திலிருந்த நான் முதல் இடத்திற்கு நகர்ந்தேன். இப்போது நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஆட்டத்தில் யாராவது பின்தங்கியிருந்தால், மீண்டும் ஒரு “கடாரா” நிகழக்கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உதித்திருக்கிறது.

கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைவுகூருவது நம் ஆவியை புத்துணர்வு அடையச் செய்து நம் நம்பிக்கையை கட்டுகிறது. இஸ்ரவேலர்கள் பஸ்காவைக் கொண்டாடியபோது அதைத்தான் செய்தார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்தில் பார்வோனால் ஒடுக்கப்பட்டபோது தேவன் அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை பஸ்கா நினைவுபடுத்துகிறது (யாத்திராகமம் 1:6-14). அவர்கள் தேவனிடம் கூக்குரலிட்டபோது, தேவன் தன்னுடைய ஜனத்தை மகத்துவமான வழியில் விடுவித்தார். அவர்கள் வீடுகளின் நிலைக்கால்களில் இரத்தத்தை தெளிக்குமாறும், அதினிமித்தம் சங்கார தூதன் அவ்வழியாய் கடந்துபோகும்போது, அவர்களின் தலைச்சன் பிள்ளைகள் உயிரோடே காக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அறிவித்திருந்தார் (12:12-13). அதின்படி அவர்கள் உயிரோடே காக்கப்பட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்டெடுத்த சிலுவை தியாகத்தின் நினைவுகூருதலாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கிறோம் (1 கொரிந்தியர் 11:23-26). தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூருவதென்பது, நமக்கு இன்றும் நம்பிக்கையளிக்கக்கூடியதாயிருக்கிறது.

இயேசு இங்கே இருக்கிறார்

வயது சென்ற என்னுடைய அத்தை, முகத்தில் புன்னகையுடன் நோய்வாய்ப்பட்ட படுக்கையில் கிடந்தார். அவரது நரைத்த தலைமுடி அவர் முகத்திலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுருக்கங்கள் அவருடைய கன்னங்களை மூடியிருந்தன. அவர் அதிகம் பேசவில்லை, ஆனால் என் பெற்றோருடன் நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் சொன்ன சில வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. “நான் தனிமை அடைவதில்லை, இயேசு என்னுடன் இருக்கிறார்" என்று அவர் முனுமுனுத்தார்.

அன்று ஒரு தனி பெண்மணியாய் நின்ற என் அத்தையின் வார்த்தைகளைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் அவரது குழந்தைகள் தொலைதூரத்தில் வசித்து வந்தனர். அவரது தொண்ணூறாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், அவர் படுத்தபடுக்கையானார். ஆனாலும் அவர் தனிமையில் இல்லை என்று அவரால் சொல்லமுடிந்தது.

“நிச்சயமாக நான் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை என் அத்தை நம்பியதுபோல நாமும் நம்பவேண்டும். உலகத்தில் போய் தன்னுடைய சுவிசேஷத்தை மக்களுக்கு பறைசாற்றுபடியாகவும், தான் அவர்களோடே இருப்பதாகவும் தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்ட (வச. 19) இயேசுவின் ஆவி தன்னுடன் இருப்பதாக என்னுடைய அத்தை நம்பினார். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களுடனும் நம்முடனும் இருப்பார் என்று இயேசு வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:16-17).

அந்த வாக்குறுதியின் பலனை என் அத்தை அனுபவித்தார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் படுக்கையில் படுத்திருந்தபோது, பரிசுத்த ஆவி அவருக்குள் இருந்தது. ஆவியானவர் தம்முடைய சத்தியத்தை, என் அத்தையின் மூலம் ஒரு இளம் மகளாய் இருக்கக்கூடிய எனக்கு பகிர்ந்துகொள்ள உதவிசெய்தார்.

சிறப்பாய் முடியுங்கள்

என் நாற்பது நிமிட உடற்பயிற்சியின் கடைசி நிமிடங்களை நெருங்கும்போது, என் உடற்பயிற்சி ஆலோசகர், “சிறப்பாய் முடியுங்கள்” என்று கத்துவார். நான் அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் அநேகர், பயிற்சி நிறைவுறும் முன் அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயிற்சியை துவங்குவதுப் போலவே, அதை நிறைவுச்செய்வதும் முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். மனித உடல் தொடர்ச்சியாக இயங்குகையில், அது தளரும் அல்லது தோயும் என்றும் அறிவார்கள்.
இது, நம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கும் பொருந்தும். கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, தான் அதிக உபத்திரவத்தை சந்திக்கப்போகிகிறதை அறிந்து, எருசலேமுக்கு போகையில் பவுல், எபேசுவிலிருந்த மூப்பர்களுக்கு தன் ஓட்டத்தை சிறப்பாய் முடிக்கவேண்டும் என்ற தன் எதிர்பார்பை அறிவிக்கிறார் (அப்போஸ்தலர் 20:17-24). எனினும். பவுல் தடுமாறவில்லை. தேவன் அவரை எதற்காய் அழைத்தாரோ, அதை நேர்த்தியாய் செய்வதே பவுலின் நோக்கம். “தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை” (வச. 24) பிரசங்கிப்பதே அவருடைய பணி. அதை நேர்த்தியாய் செய்து முடிக்க விரும்பினார். தன்னுடைய பாதையில் பாடுகள் வந்தாலும் (வச. 23), தன்னுடைய ஓட்டத்தில் நிலையாய் நின்று, முடிவுக் கோட்டை நோக்கி விரைந்தார்.
நாம் நம்முடைய உடற்பயிற்சியை செய்தாலும், அல்லது தேவன் நமக்குக் கொடுத்த திறமைகள், வார்த்தைகள் மற்றும் கிரியைகளை செயல்படுத்தினாலும், அதை நேர்த்தியாய் நிறைவு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறோம். “சோர்ந்துபோகாமல் இருப்போமாக” (கலாத்தியர் 6:9). பின்வாங்காதீர்கள். உங்கள் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்வதற்கு தேவையானதை தேவன் அருளுவார்.

ஞானமான ஆலோசனை

நான் வேதாகம கல்லூரியில் பயிலும்போது, முழுநேர வேலையிலும் ஈடுபட்டிருந்தேன். அதேவேளையில் பகுதி நேர போதகராக, சுற்றுமுறையில் ஒரு சபையிலும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் பரபரப்பாக இருந்தேன். என் தந்தை என்னை சந்தித்தபோது, “நீ முடங்கிடுவாய்” என்றார். அவர் அந்த காலத்தை சேர்ந்தவர் என்றும், இலக்கை நிர்ணயிப்பதைக் குறித்து அறியாதவர் என்றுமெண்ணி, அவர் எச்சரிப்பை உதறித் தள்ளினேன்.

நான் முடங்கவில்லை. ஆனால் கடும் வறட்சியான, கடினமான காலகட்டத்தில் மன அழுத்ததில் வீழ்ந்தேன். அன்றிலிருந்து, எச்சரிப்புகளுக்கு செவிசாய்க்கக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக என்னை நேசிக்கிறவர்களிடமிருந்து அது வரும்போது அவற்றை கவனமாகக் கேட்பேன்.

அது எனக்கு மோசேயின் சம்பவத்தை நினைப்பூட்டுகிறது. அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக, விடாமுயற்சியுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார் (யாத்திராகமம் 18:13). எனினும், தன் மாமனாரின் எச்சரிப்புக்கு செவிகொடுத்தார் (வச. 17–18). எத்திரோ, செய்வதற்கு அநேக வேலைகள் அவருக்கில்லை. ஆனால், அவர் மோசேயையும் அவனுடைய குடும்பத்தையும் நேசித்ததால், வரப்போகும் பிரச்சனையை முன்னறிந்தார். ஒருவேளை மோசே எத்திரோக்கு செவிசாய்த்து, அவர் ஆலோசனையைக் கேட்க இதுவும் காரணமாயிருக்கலாம். மோசே, சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க “ஜனங்களுக்குள் விசேஷித்தவர்களை” தெரிந்துகொண்டு, பெரிய பிரச்சனைகளை தானே கையாளுகிறார் (வச. 21–22). அவர் எத்திரோவின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, தன் பாரத்தை தானே சுமக்காமல், மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்ததினால் அவருக்கு எதிர்படவிருந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடிந்தது.
தேவனுக்கு செய்யும் ஊழியமோ, அல்லது குடும்ப காரியங்களோ அல்லது மற்ற காரியங்களைச் செய்வதற்கு இன்று நம்மில் அநேகர் ஆர்வம் காண்பிக்கிறோம். ஆனால் நம்மை நேசிக்கும் நம்பிக்கைக்குரிய நபர்களின் ஆலோசனைக்கு செவிசாய்த்து, நாம் செய்யும் அனைத்திலும் தேவனின் ஞானத்தையும், வல்லமையையும் சார்ந்துகொள்ள வேண்டும்.

நம் நேரத்தை மீட்டுக்கொள்ளல்

1960களில், என்னுடைய தகப்பனாரை திருமணம் செய்யும் பொருட்டு என்னுடைய தாயார் தன்னுடைய கல்லூரி படிப்பை தவிர்க்க வேண்டியிருந்தது என்ற தகவலை என்னிடத்தில் பகிர்ந்துகொண்டார். வீட்டுபொருளியல் துறையில் ஆசிரியராய் பணியாற்ற வேண்டும் என்ற அவருடைய கனவையும் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார். மூன்று பிள்ளைகளைப் பெற்ற பின்பு, அவர் கல்லூரிப் பட்டம் பெறவில்லை என்றாலும், அரசு நடத்தும் நிறுவனம் ஒன்றிற்கு ஊட்டச்சத்து உதவியாளராக பணியாற்றினார். ஒரு வீட்டுபொருளியல் ஆசிரியரைப் போன்று, ஆரோக்கியமான உணவுகளை செய்து நிருபித்துக் காண்பித்தார். அவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து, தேவன் தன்னுடைய ஜெபத்தைக் கேட்டு தன் இருதயத்தின் ஏக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்று அவர் என்னிடத்தில் பெருமிதத்துடன் கூறினார்.

வாழ்க்கை நமக்கும் அப்படியிருக்கலாம். நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறொன்றாய் இருக்கலாம். ஆனால், தேவனுடனான நம்முடைய உறவும், நேரமும். அவருடைய தேறுதல், அன்பு, மீட்பு போன்ற அழகான குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. வெட்டுக்கிளிகளினால் ஏற்பட்ட சேதத்தினால் (வச. 25) நேரிட்ட இழப்புகளுக்கு தேவன் சரிகட்டுவதாய் யூத ஜனங்களுக்கு (யோவேல் 2:21) வாக்களிக்கிறார். நாம் சந்திக்கிற சவால்கள் மற்றும் நம்முடைய நிறைவேறாத கனவுகள் ஆகியவற்றில் தொடர்ந்து நமக்கு உதவிசெய்ய அவர் வல்லவராயிருக்கிறார். நாம் அவருக்காய் செய்கிற தியாகங்களுக்காய் நம்மை கனப்படுத்துகிற மீட்பின் தேவனை நாம் ஆராதிக்கிறோம் (மத்தேயு 19:29).

நாம் ஒரு அழிவுக்கேதுவான சவாலை சந்தித்தாலும் சரி அல்லது நனவாக்கப்படாத கனவுகளின் தருணத்தை சந்தித்தாலும் சரி, நம்மை மீட்கிற தேவனை நோக்கிக் கூப்பிட்டு அவருக்கு துதிகளைச் செலுத்துவோம்.